இருப்பும் இறப்பும்........
வாழ்த்துகளும் வார்த்தைகளும்........
குடைகளும் சில துளிகளும்.....
நேற்று இரவு நல்ல மழை.....நள்ளிரவை தாண்டிய பொழுதில் உறக்கம் கலைத்தது . ஒரு செல்ல பிராணியை போல் அது தன் வாலாட்டலை என்னிடம் இருந்து தொடங்குகிறதோ என்பதாய் தோன்ற விழிப்பு வந்தது. உள்ளறையில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். சடசடவென்ற அதன் அழைத்தலில் என்னை மறந்து ஜன்னல் திறக்க வெளியே பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது அது.
இன்னும் கோடை தொடங்காத ஒரு இரவு, மழையில் நன்றாகவே நனைந்து கொண்டிருந்து. உள்ளுக்குள் இது பகலாக இருக்க கூடாதா என்று லேசான எண்ணம் சுழன்றடித்தது என்றால் அது பொய் என்று சொல்ல முடியாது.
குடைகள் தேவை படலாம். காலையில் அவகாசம் இருக்காது. இது நாள் வரை அவசியம் என்பதாக அது பார்க்க படவில்லை. தேவை என்பது ஒன்றின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிப்பது. மனைவியை எழுப்பினேன். அவளின் சிணுங்கல் வெளியே மழை பெய்கிறது என்பதான என் தகவலில் அதிராதவளாகவே தெரிந்தாள். குடை குறித்தான என் சிந்தனை காகித கப்பலாக மிதக்க அரம்பித்த்திருந்தது.
எவ்வளவு முறை குடை மறந்து வந்திருக்கிறேன் என்கிற கணக்கெடுப்பு என்னை முகத்தில் அறையும் சாரலானதில் தூக்கம் தொலைத்தேன் . இரண்டு முறை மின்சாரம் துண்டிக்க பட்டதும், பிள்ளைகள் மின்விசிறியை போட சொல்லி நச்சரித்ததும் கொடுமை.
மழையின் இனிமை, யாரும் பார்க்காமல் போன ஒரு பௌர்ணமி இராத்திரியாய் இருந்ததில் யாருக்கும் வருத்தமோ இல்லை கவலையோ இல்லை என்பதாவே பொழுது விடிந்தது.
சாலையில் நேற்றைய மழையின் மிச்சமும், என் முதல் நாவல் "வேர்" தொடக்கத்திலும் மழை என்னை நனைத்திருந்து. பக்கங்கள் ஈரமான உணர்வை அவ்வப்போது வெளிப்படுத்தவே செய்கின்றன என்பதை குடைகள் கொண்டு தான் தீர்மானிக்க முடிகிறது. இருந்தாலும் மழை சுத்தமாய் பங்குனி மாத தொடக்கத்தில் எட்டிப்பார்த்தது சூரியனுக்கு ஐஸ் வைப்பதாவே இருந்தது. ஒருவேளை நமக்கு வைத்தோ என்னவோ????????????எந்த ஜன்னல் கம்பிகளிலும் உலராத ஈரம் மிச்சம் இருந்ததை மறுப்பதற்கில்லை.
இதுவரை நான் ........
வணக்கங்களுடன்......
மறுபடியும் உங்களை சந்திக்கிறேன் ....நலமா....சென்னையில் அப்படி ஒன்றும் சிறப்பாக இன்று நிகழவில்லை. இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான விசயங்களை பொத்தி வைத்தபடி செல்கிறது....இங்கே சில நிகழ்வுகள் எனக்கானதாய் அமைவதை பார்க்கிற போது மகிழ்வாழ் உள்ளது ......இந்த மடலில் எனது புத்தக வரிசையை இட்டு நிரப்பி இருக்கிறேன். இனிமேல் தான் சரியான பதிவை மேற்கொள்ளவேண்டும் .......
நானும் எனது நூல்களும்:
1. தீக்குச்சி விரல்கள் - கவிதை தொகுப்பு 1998
2. என்வீடும் ஒரு குருவிக்கூடும் - கவிதை தொகுப்பு 2000
3. மேற்கு கோபுர வாசல் வழியே - சிறுகதை தொகுப்பு 2000
4. வேர் - நாவல் 2002
5. வண்ணத்து பூச்சிக்கு வண்ணங்கள் தேவையில்லை - நாவல் 2003
6.இருப்பிடம் - நாவல் 2007
7. வடபழனி முதல் பட்டினபக்கம் வரை - காதல் கவிதைகள் 2008
8. சயனகிளைகளில் கீழிறங்கும் வனம்- கவிதைகள் 2008
நலன்கள் சூழ .....
ஆர்.நாகப்பன்.
Labels: இதுவரை நான் ........