கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

ரூபாய்க்கு மூணு...!



அதன் இருப்பு
கல்யாணப்புடவை என்றானதில்
என்னைவிட
அம்மாவிற்கே மகிழ்ச்சி அதிகம்!

வாழ்வின் மிச்சத்தை
இரும்புப் பெட்டிக்குள்
ஒளித்து வைத்திருக்கும்
தீபத்தில் எண்ணெய் வார்த்தது அது!

கசங்கிய பொழுதுகளை
முந்தாணையில் தேடும்
அக்காவைப்போலில்லை
செல்லப்பூனையின்
தலைக்கோதும்
கைரேகை செத்துப்போயிருக்கும்
அவளின்கரத்தில்
ஒவ்வொருத்தொடுதலும்
பூப்பூக்கவைக்கும் அதிசயம் ரசிப்பேன்!

கண்ணாடி நனைத்து
வழுக்கும் மழையாகவே
மாட்டிவைக்க பிரியம் காட்டாத
அவளின் ஞாபகம்!!
திடீரென முளைத்த
ஒரு திருநாளில்
கட்டாயத்தின் பேரில்
அப்பாவுடன் அது நிகழ்ந்ததாய்
கொஞ்சம் வெட்க்கத்தோடுசொல்லிக்கொள்வாள்....
சமீபத்து மழையில்
நனைந்திருந்த புடவையில்
கரைந்திருந்தது அது!

"ரூபாய்க்கு மூணு"
காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது
அந்த புகைப்படக்காரனின் குரல்.....
இதுவரை அடையாளம் இழக்காத
அவளின் ஞாபகமுட்டை
குஞ்சுப் போரித்ததே இல்லை
-நேற்றுவரை!

1 comments:

பரிசல்காரன் December 10, 2008 at 4:43 AM  

//"ரூபாய்க்கு மூணு"
காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது
அந்த புகைப்படக்காரனின் குரல்.....
இதுவரை அடையாளம் இழக்காத
அவளின் ஞாபகமுட்டை
குஞ்சுப் போரித்ததே இல்லை
-நேற்றுவரை! //

நல்லாருக்கு.

இன்னும் நல்லாருக்கும் குஞ்சு பொரித்ததே இல்லை’ என்றிருந்தால்.

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain