கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

தவறுகள்.....!




தவறுகளுக்காக வருத்தப்படுங்கள் -
தெரிந்தும் தெரியாமலும் நிகழ்துவிட்ட செயலுக்கு மன்னிப்பு கேட்பதன் மூலம் ஒரு தவறு நியாயப்படுத்த முடியாமல் நிராயுதபாணியாய் அலையலாம்.
என்னையும், என்னை சார்ந்த ஏதோ ஒரு திணையின் நுனி தெரியாமல் அலைகிற மனதிற்கு கொஞ்சம் ஒத்தடம் தரும் முயற்சியாய் இது அமையலாம்.

தவறுகளை மன்னிக்க பழகுங்கள்-
வருத்தப்படுகிற எல்லோரிடமும் திருவிழாவில் தொலைந்த குழந்தையின் ஏக்கப்பார்வை ஒளிந்துக்கொண்டிருக்கலாம்.
தவறுகளை நியாயப்படுத்துங்கள்-
ஒரு செயலின் வீரியம் சரியாக செல்ல தவறுகள் அவசியமாகின்றன. எந்த தவறின் செயலும் சரியென்ற ஒன்றின் நிராகரிப்பு என்பதை எந்த மரத்தடி ஜோதிடனும் சொல்லாத ஆரூடம்.

தவறுகளை கண்டியுங்கள்-
நியாயங்களை தராசில் வைப்பதற்காகவே தவறுகளுக்கு அலங்காரம் செய்யப்படுகின்றன் என்று மனநிலை பிழன்றவன் எழுதும் வாசகமாய் அமையக்கூடும்.
தவறுகள் பொதுவாகவே வேண்டுமென்றே சுமத்தப்படும் சர்வாதிகாரம் என்பதாகவே அர்த்தபடக்கூடும்.

தவறுகளை தொலைத்துவிடுங்கள்-
அப்போதுதான் தொலையாத மானுடத்துடன் உங்களால் கைக்குலுக்கமுடியும்.
தவறுகள் களைந்த ஒரு பொட்டல் காட்டில் சிறு துளியாய், மொட்டவிழும் சிறு செடியாய் கண்சிமிட்டும் தருணங்களுக்காக காத்திருங்கள்.
தவறின் தவிர்க்க முடியாத நிர்பந்தத்தில் தவறாக இந்த பத்தி முடிந்தால் தவறு என்னிடம் இல்லை, வாசிக்கும் உங்களிடம் இருக்கலாம்.
தவறு வலிந்து திணிக்கப்படுவதாகவே கற்ப்பிதம் செய்யப்படுகின்றன.

போதும் முடித்துக்கொள்கிறேன்-
வேறென்ன செய்ய தவறில்லாமல் எழுதவும், பேசவும் கற்றுக்கொள்ளாமல் தவிப்பவனுக்கு தவறுகள் நியாயமாகவே படுகின்றன.

ரா.நாகப்பன்.

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain