கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

அவதரிக்கிறேன்...!


எனக்குள் ஆயிரம் கேள்விகள்...
விடைகிடைக்காமல்....!
எந்த வினாவும் விடைகளை பொத்திவைத்து என்னை கண்ணாமூச்சி ஆட வைத்ததில்லை...


ஒரு சின்ன கேள்வியின் நூலிழையில் தொடங்கிவிடும் என் காலைபொழுது விரிந்து, வளர்ந்து மாலைவரை எதோ ஒன்றை நிகழ்த்தி விட்டு ஓடிவிடுகிறது.
ஒரு வழியாய் ஒரு ஆண்டு ஆடி ஓடி முடிய போகிறது.


அப்படியா....!
நாளை முதல் புது ஆண்டு... நினைப்பின் கதகதப்பு...சில்லென்ற சுவாசம்...என்னை வசீகரிக்கிறது.
தீர்மானங்கள், எதிர்பார்ப்புகள், முன்வைப்புகள் என்பதான என் தேடல் இப்போதும் தீவிரப்படுத்தப்படலாம்.


புதுப்புத்தகக் கடையில் பெயர்சொல்லி வாங்கும் புத்தகத்தின் புதுவித வாசனை, பழைய புத்தகத்தின் கிழிந்த பக்கத்தில் ஒளிந்திருக்கும் மயிரிறகு சுமந்த பழுப்பேறிய வாசனை எதிலும் ஒன்றாத மனசு பட்டாம்பூச்சியாய் சிறகு விரிக்கிறது.
எழுத வேண்டும் என்கிற எண்ணத்தின் தீராத ஆசை...!
லேசாய் ஜன்னல் திறக்கிறேன்...


வெளிச்சம் நுழைய பார்க்கிறது...!
கோலம் தாண்டிய அதன் கீற்று என்னை தீண்டுகிறது. நான் என் நீண்டப் பயணத்தின் பிள்ளையார் சுழியை போட எத்தனிக்கிறேன்.


கனவு விற்பனைக்கு வர காலத்தாமதமாகலாம்-ஆனால்
சந்தைகளை முன் வைத்தே தற்போது கனவுக் காண ஆரம்பிக்கிறேன்.


வாழ்த்துகளை இன்றுகளுக்கு சொல்லி

நன்றிகளை நாளைகளுக்கு சொல்லும் தலை கீழ் விகிதத்தின் நூலறுந்த என் பட்டம் சரியாக என் வாசலில் விழுகிறது.


நான், நீங்கள், இன்னும் நம்மில் பலர்...
ஒன்றாக கூடுகிறோம்.


புது ஆண்டிற்கு வாழ்த்துகள் சொல்லியபடி சிணுங்குகிறது என் செல்போன்.
வேறென்ன வாழ்த்துகள் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.


-ரா.நாகப்பன்

ஈரமண்ணின் நேசத்துடன்

அன்பார்ந்த தமிழ் இதயங்களே....
பணிவன்புடன் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுகிறேன்
நலமா....??????????


தற்சமயம் சென்னையில் வசிக்கிறேன்....
ஒரு முக்கிய செய்தி உள்ளது.


" ஈரமண்ணின் நேசம் " என்ற ஒரு மாத அச்சு இதழை பதிவுசெய்து வரும் ஜூன் 2010முதல் கொடு வர திட்டமிட்டு இருக்கிறேன்.
நண்பர்கள் தங்களின் படைப்புகளை இதழுக்கு எழுதலாம்....


மண் மணம் குறித்த எந்த படைப்பும் வரவேற்கிறேன்...
அது மட்டுமில்லாமல் இதழில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்புகொள்ளலாம்...


சென்னையில் விளம்பர நிறுவனமாகவும் தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்புக்கான பணிகளும் தற்போது நான் மேற்கொண்டிருப்பதால் திரை துறை ஆசையும் எழுத்து மீது அதீத ஈடுபாடும் உள்ள அனபர்கள் தொடர்புக்கொள்ளலாம்....


வெளி நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் கௌரவ பொறுப்பிலும் படைப்புகளை அனுப்பியும் பங்களிக்கலாம்....

தொடர்புகொள்ள:

ரா.நாகப்பன்,
எச்- 48 திருப்பூர் குமரன் தெரு,
எம்.எம்.டி.ஏ., காலனி,
அரும்பாக்கம்,
சென்னை-600106
தமிழ்நாடு

இந்தியா

அழைக்க:

0091-9444105390

ஈரமண்ணின் நேசத்துடன்......

ரா.நாகப்பன்

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain