கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

வன்முறைகளும் வரைமுறைகளும்!



பொதுவா எல்லோருக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிக்கொண்டு இருக்கும்;இருக்கலாம்...ஆனால் பலபேர் பலவிதமாக எழுப்பவோ, உசுப்பிவிடவோ எத்தனிப்பது கிடையாது. ஆனால் நேற்று நடந்த சம்பவம் "சென்னையா இது" என்று கேள்விக் கேட்கவைத்தது என்பதை வெட்க்கத்தோடு சொல்லித்தான் ஆகவேண்டும்....

தூங்கும் மிருகத்தை விழிக்க வைத்த விபரீதத்தை என்ன சொல்ல?
மாணவர்களுக்குள் சண்டைகள், சச்சரவுகள் எல்லாம், எல்லா காலங்களிலும் இருந்துகொண்டு வரும் ஒன்றாக இருந்தாலும் இதுவரை எந்த ஊடகத்திலும் இதுபோன்றதொரு வன்முறையை பார்த்திருக்கமாட்டோம்.

சட்டம் ஒழுங்கு காக்க படிக்கிற சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டக்கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இப்படி காட்டுமிராண்டித் தனமாக நடந்துக்கொண்டது பொதுவாக எல்லா மாணவர்களையும் வருத்த்திர்க்குள்ளாக்கி இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

ஏன் இந்த வன்முறை எதற்காக இப்படி ஒரு அராஜகம்.ஒருகணம் யோசித்தால் இந்த விபரீதத்தின் உண்மை தெரியலாம்!

என்னதான் வாசலுக்கு வெளியே பாதுகாப்பு என்கிற பெயரில் காவல்துறை நின்றுகொண்டு இருந்தாலும் கண்ணெதிரே ஒரு வன்முறை நடந்து இருக்க பத்தடி தூரம் இல்லை அதை நிறுத்த முடியாதா என்கிற பாவமான கேள்வியை பாமரத்தனமாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது.

தொலைக்காட்சியில் இந்த பதிவை பார்த்த பலருக்கு உண்மையில் மனம் வலித்திருக்கும். என்னதான் அரசியல் ஆதாயம் இல்லை வேறு உள்நோக்கம் என்கிற பேச்செல்லாம் பேசப்பட்டாலும் கூட நடந்தது உண்மையில்லை என்று மறுக்க முடியாது.

தீவிரவாதிகள், தீவிரவாதம் இப்படி பேசிப்பேசியே மிதவாதிகளைக்கூட தீவிரவாதிகளாக்கிவிட்டு கொண்டிருக்கிறோம் என்கிற கேள்விக்கூட எழுவதுண்டு.என்ன பேசி என்ன இரண்டு உயிர்....

பொதுவாக தப்பேக்கூட செய்திருந்தாலும் இப்படியா ஓட ஓட விரட்டி அடித்து குமுறும் அட்டூழியம் .....இந்த கலாச்சாரம் உண்டாக யார் காரணம்?நீங்கள், நான், ஏன் நம்மை சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகளாக மாறியிருக்கிறோம்.

வன்முறையை கட்டவிழ்க்கும் இந்த காட்டுமிராண்டிக் கலாச்சாரம் பரவாமல் தடுக்க நாம் தான் முனையவேண்டும் . வரைமுறையில்லாமல் வந்துபோகும் இதுபோன்ற சம்பவங்கள் வாழும் சந்தர்ப்பங்களை வழுக்கி விழவைக்கும் தருணங்களாகவே அமைந்துவிடுகின்றன என்பதை சொல்லிக்கொள்ள வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

எதையும் இரண்டுமுறை யோசித்து, மூன்றுமுறை ஆலோசித்து, ஒருமுறை முயலும் எந்த விசயமும் மாறிப்போய்விட்டதா என்று அஞ்சவைக்கிறது.
குற்றவாளிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறதா கல்லூரிச்சாலைகள்?குற்றங்களை தெரிந்துகொள்ளத்தான் வகுப்பறைக்குள் நுழைகிறதா இன்றைய மாணவ சமுதாயம்?
வன்முறைகளை விசாரிப்பதிலும், வரைமுறைப்படுத்துவதிலும் ஓய்வெடுத்துக் கொள்கின்றனவா முதுகெலும்பு இல்லாத பேனாக்கள்????

"சட்டக்கல்லூரிக்குள் வன்முறை" - தலைப்பு செய்தியாக்கிவிடும் பத்திரிகைகளின் நான்காம் பக்க நமத்து போன செய்திகளில் காபியோ டீயோ உறுஞ்சிக் கொண்டிருக்கும் இன்றைய பொழுதின் முகத்தில் ஆசிட் அடிக்க கடவது........

பி.கு: கசங்கிய காகிதமாய் அடிப்பட்ட அந்த இளைஞனை ஆட்டோவில் ஏற்றியது மிக மிக கொடுமை.....ஏன் ஆம்புலன்சை அழைக்க அந்த நேரத்தில் அவகாசம் இல்லையா......முதல் உதவி எல்லாம் இரண்டாம் உதவி ஆகிபோய்விட்டதா??????

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain